Tuesday, October 21, 2014

வழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு

இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது.  ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக அநீதி இழைக்கும் இடங்களாக மாறிவிட்டன.    இந்திய நீதிமன்றங்களில் பல லட்சக்கணக்கான வழக்குகள் விசாரணை இல்லாமல் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன.
தமிழக நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் 20 லட்சம்: ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எண்ணிக்கை  தினமலா்  18/10/2014
வழக்கில் சிக்கியவா்கள் பல ஆண்டுகள் வக்கீலுக்கு பணம் கொடுத்தும்  நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்தும் நீதி கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாா்கள்.  குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்கள் பல கோடி கணக்கில் லஞ்ச ஊழல் நடக்கும் இடமாக இருக்கின்றன என்று சா்வதேச புள்ளி விபரம் கூறுவதாக தமிழக கால்துறையே குறிப்பிட்டிருக்கிறது. 
"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006!" - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
இந்தச் சூழலில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவா்களின் கதி என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டவருக்கு தக்கசமயத்தில் சரியான நீதி வழங்கப்படாமல் அவர்கள் உடலாலும், மனதாலும் வேதனை அடைந்து, துன்புறுத்தப்பட்டு பிறகு பல ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் நீதி அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகத்தான் இருக்கும் (Justice Delayed = Justice Denied). 
  
பல ஆயிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் விடுவதைவிட பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஒரே ஒரு அப்பாவிக்குக்கூட தக்க சமயத்தில் நீதி வழங்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய அநீதி என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இந்த அவலத்தை முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி திரு.ஸபர்வால் அவர்கள் தனது உரையில் வேதனையுடன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
 JUSTICE SOBHAG MAL JAIN MEMORIAL LECTURE ON DELAYED JUSTICE DELIVERED BY HON’BLE SHRI Y.K. SABHARWAL, CHIEF JUSTICE OF INDIA ON TUESDAY, THE 25thJULY, 2006
I will conclude by referring to the observation made by Justice Warran Burger, former Chief Justice of the American Supreme Court observed: “…… The notion – that ordinary people want black-robed judges, well dressed lawyers, fine paneled courtrooms as the setting to resolve their disputes, is not correct. People with legal problems, like people with pain, want relief and they want it as quickly and inexpensively, as possible.”

வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் யாரும் அழகான நீதிமன்ற கட்டிடங்களையும், நேர்த்தியான கருப்பு வெள்ளை சீருடையில் அமர்ந்திருக்கும் நீதிபதியையும், வழக்கறிஞர்களையும் கண்டு மகிழ்வதற்காக நீதிமன்றத்திற்கு விரும்பி வருவதில்லை.
வழக்குகளில் சிக்கியிருக்கும் வயதான பெரியோர்களும், உடல்நலக்குறைவு உடையவர்களும், பெண்களும், இளைஞர்களும் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில்கூட தங்களுக்கு (விரைவாக) நீதிகிடைக்காமல் சொல்லமுடியாத மனவேதனைகளுடன் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி விரைவாகவும், நேர்மையாகவும், லஞ்ச ஊழல் தலையீடு இல்லாமலும் கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே.
தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிதானே?

இதை படித்துவிட்டு பின்வரும் செய்தியை படித்தால்  உங்களுக்கு ஒரு தெளிவான உண்மை புரியும்.

அக்டோபர் 20,2014 தினமலா்

சாத்தூர் : சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட் மீது வீசினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, மேலத்தாயில்பட்டியைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 38. இவர், விவசாயக் கிணற்றில் மோட்டார் பம்ப் திருடிய வழக்கில் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக,நேற்று காலை, சாத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் மாரியப்பன் முன், பாக்யராஜை போலீசார் ஆஜர்படுத்தினர். எஸ்.ஐ., சதீஷ்பிரபு கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை, 15 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், பாக்யராஜை மீண்டும் சிறையில் வைக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அப்போது, பாக்யராஜ், ''என்னை உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை. எனக்காக வாதாட வழக்கறிஞரும் இல்லை. வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும்,'' என, மாஜிஸ்திரேட்டிடம் வலியுறுத்தினார். இதற்கு மாஜிஸ்திரேட், ''இலவச சட்ட உதவி முகாமை அணுகி வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்,'' என்றார்.

இதனிடையே, உள்ளாடையில், பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட்டை நோக்கி, பாக்யராஜ் வீசினார். இது, மேஜை மற்றும் மாஜிஸ்திரேட் உடையில் பட்டது. பாக்யராஜை, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று,  விசாரிக்கின்றனர்.  கைதியை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது, முழுமையாக சோதனையிட வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார், இதை பொருட்படுத்துவதில்லை. கைதிகள் வேறு பொருட்களை வைத்துள்ளனரா, என்பதை கண்டறிய வேண்டும். போலீசாரின் அஜாக்கிரதையால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

Tuesday, May 13, 2014

போதிய சட்ட அறிவு இல்லாத கீழ்நிலை நீதிபதிகளிடம் சிக்கித் தவிக்கும் நீதி

இந்தியாவில் பல கீழ்நிலை நீதிமன்றங்களில் போதிய சட்ட அறிவு இல்லாமல் இருப்பவர்கள் பணி புரிகிறார்கள்.  பல வழக்குகளில் இவர்களின் கையில் பல அப்பாவிகள் சிக்கித் தவிக்கிறார்கள்.   குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளில் கண்ணை மூடிக்கொண்டு குற்றப்பத்திரிக்கையை படிக்காமலேயே வழக்குகளை ஆரம்பித்து பல ஆண்டுகள் இழுத்தடித்து அப்பாவிகளுக்கெதிராக அநீதி இழைக்கப்படுகிறது என்பது கீழ்நிலை நீதிமன்றங்களில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு நன்றாகவே தெரியும்.

அதுபோலவே இந்திய மண்ணுக்கு வெளியே இந்திய குடிமகனால் மற்றொரு இந்திய குடிமகனுக்கு இழைக்கப்படும் குற்றங்களை இந்திய நீதிமன்றங்களில் விசாரிக்க மத்திய அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல்தான் கீழ்நிலை நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்பட்டு அப்பாவிகளின் காலம், மனம், பணம் போன்றவை வீணடிக்கப்படுகின்றன.  இதுமட்டுமல்லாமல் இதுபோன்ற தவறான வழக்குகளை நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் நடத்திக்கொண்டிருப்பதால் இந்திய மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது.


அடிப்படை சட்ட அறிவு இல்லாத நீதிமன்றங்களில் சிக்கும் அப்பாவிகளை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.

வெளிநாட்டில் குற்றச் சம்பவம்; இந்தியாவில் விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு


மே 13,2014 தினமலர்

மதுரை: 'திருச்சியை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில், தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி, ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக, வந்த புகாரின் அடிப்படையில், கீழ் கோர்ட் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாட்டில் நடந்த குற்றச் சம்பவத்திற்கு, இந்தியாவில் விசாரித்து, தண்டனை வழங்க முடியாது. விசாரிக்க, மத்திய அரசின் அனுமதி தேவை,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி புதூர் கார்த்திக் தியோடர். இவர், ஆஸ்திரேலியா சிட்னியில் பணிபுரிந்தார். அங்கு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், ஓட்டல் வைத்துள்ளார். அவரது 29 வயது மகளுக்கும், கார்த்திக் தியோடருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண், 'எனக்கும், கார்த்திக் தியோடருக்கும், 2007 ல் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றிக்கொண்டோம். கணவன், மனைவியாக வாழ்ந்தோம். திருமணம் செய்வதாகக்கூறி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். கார்த்திக் தியோடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கில் கார்த்திக் தியோடருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருச்சி செஷன்ஸ் (மகிளா) கோர்ட், 2011 செப்.,29 ல் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் கிளையில் கார்த்திக் தியோடர் மனு செய்தார்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு:

பெண் குற்றச்சாட்டின்படி, சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அச்சம்பவத்திற்கு இங்கு வழக்குப் பதிவு செய்து, தண்டனை வழங்க முடியாது. இங்கு விசாரிக்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அந்நடைமுறை, இவ்வழக்கில், கீழ் கோர்ட்டில் பின்பற்றப்படவில்லை. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பற்றி, அவரது தரப்பு சாட்சிகளிடமும் விசாரிக்க வேண்டும். புகார்தாரரான தமிழ் பெண் பட்டம் பெற்று, சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., படித்தபின், அங்கு ஒரு வங்கியில் பணிபுரிந்துள்ளார். அவர் தமிழ் பெண்ணாக இருந்துகொண்டு, அவரது பெற்றோருக்குத் தெரியாமல், திருமணத்திற்கு முன்பே, மனுதாரருடன் சேர்ந்து வாழவேண்டிய அவசியம் என்ன? அப்பெண், மனுதாரருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் புகார் கொடுத்திருக்கலாம். திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது. இதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. வெளிநாட்டு வேலைக்குச் சென்றாலும், இந்திய கலாசாரத்தை மறக்காமல் பின்பற்ற வேண்டும். கீழ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்றார்.

Saturday, October 13, 2012

அநீதி தலைவிரித்தாடும் இந்திய நீதித்துறை!

நேற்றைய செய்தியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழகத்திலுள்ள கீழ்நிலை நீதிமன்றங்களில் நிலவிவரும் ஊழல் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.  இது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் என்று ஒரு வாக்கு இருக்கிறது. இதனை நம்பி அதர்மத்தின் பிடியில் இருக்கும் தர்மத்தை காப்பாற்ற வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையுடன் பல அப்பாவி இந்தியர்கள் நீதிமன்றங்களை நாடுகிறார்கள்.  ஆனால் அந்த நீதிமன்றங்களில் அதர்மத்தைவிட மிகுந்த பேராபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்று இந்த பாவப்பட்ட  அப்பாவிகளுக்குத் தெரிவதில்லை.

இந்திய நீதித்துறையில் குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்களில் ஊழலும், அதர்மமும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது என்று “Transparency International" என்ற சர்வதேச நிறுவனம் ஒரு புள்ளிவிபரம் கொடுத்திருக்கிறது என்று தமிழக காவல்துறை தனது மாத இதழில் குறிப்பிட்டிருக்கிறது.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006!" - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
இது போதாதென்று இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் கீழ்நிலை நீதிமன்றங்களை இந்திய கிராமப்புறங்களில் இயங்கும் தரமற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒப்பிட்டு  நீதி என்பது அப்பாவி ஏழை இந்தியர்களுக்கு எட்டாத கனி என்று கொஞ்சமும் கூசாமல் வர்ணனை செய்திருக்கிறது.

NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........

இந்திய நீதித்துறை செயல்படும் விதம் பற்றி  உச்ச நீதிமன்றத்தின் தன்னிலை விளக்கம் எவ்வளவு உண்மை என்று பின்வரும் பல செய்திகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தலைமறைவுக் குற்றவாளி நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிசயம்!
Indian Express Fri May 21 2010
Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him. 

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இந்திய அளவில் நீதிமன்றங்களின் தரம் இப்படி இருக்கையில் தமிழகத்தைப் பற்றி தமிழக தலைமை நீதிபதியின் கருத்தைப் படித்துப் பாருங்கள்.

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12, 2012 One India Tamil


சென்னை: நீதிபதிகள் லஞ்ச ஊழலுக்கு அப்பாற்றபட்டவர்களாக இருக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர்மீது புகார் வந்துள்ளதாகவும் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 167 பேர் சிவில் நீதிபதிகள் வியாழக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு எம்.ஒய். இக்பால் பதவி பிரமாணம் செய்து வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

நீதிபதிகள் விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது. உங்களுக்கு எதிராக ஊழல் புகார் சுமத்தப்பட்டால், உடனே பதவி விலகிவிடுங்கள். தற்போது நீதிபதிகள் மீதும் ஊழல் புகார் குறித்த தவறான கண்ணோட்டம் எழுந்துள்ளது. அதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள். தமிழ்நாட்டில் 900 நீதிபதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக 500 புகார் மனுக்கள் உள்ளன.

ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கண்காணிக்க ஊழல் கண்காணிப்பு கமிட்டி இருப்பதுபோல், நீதிபதிகளையும் கண்காணிக்க எனது தலைமையில் கண்காணிப்பு கமிட்டி உள்ளது. நீதிபதிகளுக்கு எதிரான மொட்டை புகார்கள் மீது கவனம் செலுத்த மாட்டோம். உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால் தீவிரமாக கண்காணிக்கப்படுவீர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள் ஊழலுக்கு அடிபணியாதவர்கள் என்ற கருத்துக்கு உதாரணமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மூத்த நீதிபதிகளுக்கு மதிப்பு கொடுங்கள். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஓத்துழைப்பு கொடுங்கள். நீதிமன்ற அலுவல் நேரத்தில் ஒழுக்கம், கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

நீதிபதி கருத்தினால் சலசலப்பு

இன்றைக்கு ஏழை எளிய மக்கள் நீதிபதிகளை கடவுளுக்கு சமமாக மதிக்கின்றனர். நியாயம் வழங்கும் நீதிபதிகளே இன்றைக்கு லஞ்ச ஊழல் புகாரில் சிக்கியுள்ளதாக தலைமை நீதிபதி ஒருவரே கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்துக்கூறியுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், தலைமை நீதிபதி இத்தகைய பேச்சினை பொது இடத்தில் பேசுவதை தவிர்த்திருக்கலாம் என்றார். நீதிபதிகள் மீது புகார் இருப்பதாக கூறியுள்ளதால் பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீது ஐயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தலைமை நீதிபதியின் கருத்து எவ்வளவு உண்மை என்பதை தெரிந்துகொள்ள சில சான்றுகள் பின்வரும் செய்திகளில் உள்ளன.  "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"  என்ற உண்மையை அறிந்தவர்கள் இந்திய நீதித்துறையின் தரத்தை இப்போது நன்றாக அறிந்துகொள்வார்கள்.
ஆகஸ்ட் 08,2010 தினமலர்
சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார்.ப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.
 பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்"
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.
பெண் ஊழியரை புரோக்கராக நீதிபதி வைத்திருந்தாரா?
DATED: 5.1.2010 

Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.
அக்டோபர் 07,2012 தினமலர்

 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜூலு "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இவர் மீதான பல புகார்கள் குறித்து, மதுரை ஐகோர்ட் பதிவாளர் உதயன் விசாரணை நடத்தி வழங்கிய அறிக்கைபடி, சென்னை ஐகோர்ட் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள், ராமநாதபுரம் கோர்ட்டில், மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜூலுவிடம், "சஸ்பெண்ட்' உத்தரவை வழங்க வந்தனர். இவர் விடுமுறையில் இருந்ததால், "சஸ்பெண்ட்' உத்தரவு நகலை, நீதிபதியின் வீட்டின் கதவில் ஒட்டினர். மேலும் ஒரு நகலை, ராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி சிவசுப்பிரமணியத்திடம் வழங்கினர்.

 இதுபோன்று அநீதி தலைவிரித்தாடும் இந்திய நீதித்துறையில் எந்த அப்பாவி இந்தியனுக்காவது நீதி கிடைக்குமா?

நீதித்துறை இப்படி தறிகெட்டு லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? 

இந்தியாவில் குடிமைப்பணி, காவல் பணி செய்ய அகில இந்திய அளவில் தகுதித் தேர்வின் (All India Civil Services Exam) அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கிறார்கள்.  ஆனால் நீதித்துறைக்கு மட்டும் எந்தவித கேள்வி முறையும் இன்றி நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள்.  இதுபோன்ற நீதிபதிகளை உருவாக்கும் சட்டக்கல்லூரிகளின் தரம் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும்.  இதுபோன்ற இடங்களில் உருவாகும் உறுப்பினர்கள்தான் எந்தவித தர நிர்ணயமும் இன்றி வழக்காடுபவர், மாஜிஸ்ட்ரேட், நீதிபதி என்று பல நிலைகளில் இருந்துகொண்டு நாட்டின் முக்கியமான நீதித்துறையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதன் தாக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதன் சிறு தொகுப்புதான் மேலுள்ள செய்திகள்.  இந்த சூழலில் எந்த அப்பாவி இந்தியனுக்காவது சரியான நீதி கிடைக்குமா?

Times of India Jul 21, 2012

NEW DELHI: Aiming to infuse young talents to higher judiciary, the government has prepared a Cabinet note to introduce the Indian Judicial Service (IJS) — an all-India service on the lines of the Indian Administrative Service (IAS) and Indian Police Service (IPS). The proposal is likely to be brought before the Union Cabinet next week for its approval.

The Supreme Court, which had initiated the process of consultation with all HCs a few years ago, has been in favour of creating IJS due to large number of pending cases in different courts and also the prevailing trend where many bright law graduates prefer corporate law firms to judiciary. Conducive environment, good remunerative package and better career progression — like in the IAS and the IPS — may attract talented professionals to enter the judicial service.


இந்தியாவைப் பொறுத்தவரை 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் முதல் தர மாணவர்கள் 12ம் வகுப்பில் முதல் இரண்டு பிரிவுகளை (கணிதம், உயிரியல்) தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் என்ற இரு துறைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.

அடுத்த கட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தர வரிசைப்படி தங்களின் மதிப்பெண்ணிற்கேற்ப 12ம் வகுப்பில் வணிகவியல், இலக்கியம், தொழிற்கல்வி, கடைசியில் வரலாறு என்ற பிரிவுகளில் சேர்ந்துவிடுகிறார்கள்.  பிறகு கல்லூரியில் இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை மாணவர்கள் முறையே B.Com., B.A. (Literature), கடைசியில் B.A. (History)  என்ற பிரிவுகளில் சேர்ந்துவிடுகிறார்கள்.  அதற்குப் பிறகு  மூன்றாவது வகை மாணவர்கள் சட்டக் கல்லூரிக்குச் சென்று  B.A., B.L.,  என்ற தகுதியுடன் நீதிமன்றங்களுக்குள் நுழைந்து நாட்டின் நீதித்துறையின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள்.  இப்போது நாட்டின் நீதியின் தரம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். மேலுள்ள செய்திகள் ஏன் உருவாகியிருக்கின்றன என்ற ரகசியமும் புரிந்திருக்கும்.

Friday, September 21, 2012

சமுதாயத்தை சீரழிக்கும் செயல்படாத இந்திய சட்டங்கள்

இந்தியாவில் 1961-ல் உருவாக்கப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டம் சுயநல ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் இன்றுவரை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.  வரதட்சணை பிரச்சனையை சமுதாயத்திலிருந்து அறவே நீக்க யாருக்கும் விருப்பமில்லை.  சமுதாயம் சீரழியவேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம்.  அப்படி அழிகின்ற சமுதாயத்தில் முடிந்தவரை கொள்ளையடிக்கலாம் என்பதுதான் உண்மையான குறிக்கோள். 

  1. வரதட்சணை தடுப்புச் சட்டம் பிரிவு 3ன் படி வரதட்சணை கொடுப்பதும், பெறுவதும் குற்றம்.  ஆனால் இதுவரை வரதட்சணை கொடுத்தவர் எவரையும் நீதிமன்றம் தண்டித்ததில்லை.  அதற்கான காரணம் வரதட்சணையை ஒழிக்க யாருக்கும் அக்கறையில்லை.

  2.  மத்திய அரசுப் பணியாளர் யாரும் தனது திருமணத்திலோ அல்லது தனது பிள்ளைகளின் திருமணத்திலோ வரதட்சணை வாங்கவோ, கேட்கவோ, கொடுக்கவோ கூடாது என்று நடத்தை விதிமுறை இருக்கிறது.  இதை யாரும் பின்பற்றுவதில்லை.

  3. தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிமுறைப்படி தமிழ் நாடு அரசுப் பணியாளர் தனது அல்லது தனது பிள்ளைகளின் திருமணத்தில் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ, கேட்கவோ இல்லை என்று திருமணம் முடிந்த பிறகு மணமகன், மணமகள் இரு தரப்பிலும் உறுதிமொழி பெற்று அந்த படிவத்தை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும். இதை யாரும் பின்பற்றுவதில்லை. அரசாங்கமும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

  4. தமிழ்நாடு வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் சமூக நல அலுவலர், மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் (DSP)  ஆகியோர்கள் தங்கள்து பகுதியில் நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பரிவர்த்தனை நடக்காமல் கண்காணிக்கவேண்டும்.  இதை யாராவது இதுவரை செய்திருக்கிறார்களா?

  5.  திருமண பதிவு விண்ணப்பத்தில் மணமகளும், மணமகனும் தங்களது திருமணத்தில் வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெற்றுக்கொள்ளவோ இல்லை என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.  எத்தனை பேர் உண்மையான உறுதி மொழி கொடுக்கிறார்கள்? திருமணம் பதிவு செய்யப்பட்ட பிறகு மணமகள் தான் வரதட்சணை கொடுத்ததாக கணவன் மீது வரதட்சணை வழக்கு தொடுக்கிறார்!  யாராவது இதைப்பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்களா?

    சமுதாயத்தில் பெண்கள் செய்யும் குற்றங்கள்  குற்றங்களாக கருதப்படுவதில்லை. வரதட்சணை விஷயத்தில் மணமகள், மணமகன் இருவருமே குற்றம் புரிகிறார்கள். ஆனால் வழக்கு பதிவு செய்வது மணமகன் மீது மட்டும்.   அப்படியென்றால் பெண்களை வரதட்சணை கொடுத்து குற்றம் புரிய அரசாங்கம் ஊக்கமளித்து கடைசியில் வரதட்சணை கொடுக்க முடியாத ஏழைப் பெண்களின் வாழ்வை நாசமாக்குகிறது.

இப்படி இந்திய சட்டங்களும், விதிமுறைகளும் சரியாக நடைமுறைப்படுத்தப்படாமல் வரதட்சணை பற்றி கூச்சலிடுவது மிகப்பெரிய குற்றம்.  இன்னும் சொல்லப்போனால் செய்தித்தாள்களில் அரசாங்கப் பணியில் இருக்கும் மணமகளின் தந்தை, உயர் கல்வி கற்ற மணமகள் தாங்கள் திருமணத்தில் வரதட்சணை கொடுப்பதாக தைரியமாக தங்களது சட்டவிரோதமான செயலைப் பற்றி பெருமையாக அறிக்கை தருகிறார்கள்.  காவல்துறையோ, நீதிமன்றமோ இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.  

காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் இவர்களைப் பொறுத்தவரை சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாமல் சமுதாயத்தில் குற்றங்களை ஊக்குவித்து அதில் பல குடும்பங்களை சிதைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதுதான் குறிக்கோள் என்று பின்வரும் செய்தியைப் படித்தால் நன்றாகவே புரியும்.

தாலி கட்டிய 4 மணி நேரத்தில் மனைவியை பிரிந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி

 தினமலர் 21 செப்டம்பர் 2012

சென்னை: போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும், சென்னையை சேர்ந்த ஐ.எப்.எஸ்., அதிகாரி, தாலி கட்டிய, நான்கு மணி நேரத்தில் மனைவியை பிரிந்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


சென்னை வளசரவாக்கம், காமாட்சி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கி அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது மகள் பவித்ரா, 22, பி.எஸ்.சி., பட்டதாரி. இவரது போட்டோ மற்றும் அவர் படிப்பு பற்றிய தகவல்களை திருமண இணையத்தளத்தில் வெளியிட்டு, மாப்பிள்ளை தேடி வந்தனர். எழும்பூர் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ரயில்வே அதிகாரி செங்குட்டுவன். இவரது மகன் கோவேந்தன், 25. ஐ.எப்.எஸ்., (இந்தியன் பாரீன் சர்வீஸ்) அதிகாரி. இணையதளத்தில் வெளியான விளம்பரத்தை பார்த்த செங்குட்டுவன், மகன் கோவேந்தனுக்கு, பவித்ராவை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இரு தரப்பினரும் பேசி, திருமணத்தை நிச்சயம் செய்தனர். கடந்த, 18ம் தேதி, கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை திருமணம் நடந்தது. வரதட்சணையாக, பெண் வீட்டார், 50 சவரன் நகையும், மாப்பிள்ளைக்கு, 5 சவரனில் செயின் மற்றும் 7.5 லட்ச ரூபாய் ரொக்கம் கொடுத்தனர். முகூர்த்த நேரமான காலை, 7:00 மணி முதல், 8:00 மணிக்குள், பவித்ராவின் கழுத்தில், கோவேந்தன் தாலி கட்டினார். தாலி கட்டிய பிறகு மதிய உணவு மண்டபத்தில் தயாராக இருந்தது. உணவை சாப்பிடாமல் மாப்பிள்ளை வீட்டார் புறக்கணித்தனர். "மாப்பிள்ளை வீட்டார் ஏன் சாப்பிடவில்லை' என, பெண் வீட்டார் விசாரித்தனர். அப்போது, "4 லட்சம் ரூபாய் ரொக்கம், மாப்பிள்ளை வேலை பார்க்கும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு விமானத்தில் செல்ல, 1.50 லட்சம் ரொக்கம் என, 5.50 லட்சம் ரூபாய் வேண்டும்' என கேட்டனர். "நாங்கள் கேட்ட வரதட்சணையை கொடுத்தால் தான், பெண் வீட்டாருடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வோம்' என, மாப்பிள்ளை வீட்டார் கறாராக கூறினர். இரு வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 8:00 மணிக்கு தாலி கட்டிய கோவேந்தன், 12:00 மணிக்கு, திருமண மண்டபத்தில் இருந்து காரில் வெளியேறினார். மஞ்சள் கயிறு ஈரம் காயும் முன், மனைவியை, கணவர் பிரிந்து சென்றதை, திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேற்று காலை கமிஷனர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் பவித்ரா வந்தார். "தாலி கட்டிய கணவர் என்னை தவிக்க விட்டுச் சென்று விட்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகார் கொடுத்தார். பத்திரிகையாளர்களிடம், பவித்ராவின் தந்தை பன்னீர்செல்வம் கூறியதாவது: கூடுதல் வரதட்சணை தர மறுத்ததால், மாப்பிள்ளை கொடூரமாக நடந்து கொண்டார். மண்டபத்தில் இருந்து காரின் கதவை வேகமாக சாத்தினார். அப்போது, கதவில் கை வைத்துக் கொண்டிருந்த எனது மகள், கையை வேகமாக எடுத்து விட்டார். இல்லையெனில், மகளின் கை விரல் துண்டாகியிருக்கும். என் மகளின் வாழ்க்கை இப்படி ஆகும் என நினைக்கவே இல்லை. இனிமேல், கோவேந்தனுடன் வெளிநாடு சென்றால், என் மகள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை. மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

டாக்டர் மாப்பிள்ளை வரனை கெடுத்தனரா:
பவித்ரா - கோவேந்தனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த போது, கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஏற்பாடு கைவிடப்பட்டது. அதனால், பவித்ராவுக்கு டாக்டர் மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து, அவரது பெற்றோர், திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அதைத் தெரிந்து கொண்ட கோவேந்தன், அந்த டாக்டர் மாப்பிள்ளையிடம் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, கெடுத்து விட்டதாக தெரிகிறது. அதை நம்பிய டாக்டர் மாப்பிள்ளை, பவித்ரா வேண்டாம், என ஒதுங்கி விட்டார். அச்சம்பவம் நடந்த சில நாட்களில், ஐ.எப்.எஸ்., அதிகாரி கோவேந்தனின் தந்தை, மீண்டும் பவித்ராவின் தந்தையிடம், "பழைய சம்பவங்களை மறந்து விடுங்கள். என் பையனுக்கு, உங்கள் பெண்ணை மிகவும் பிடித்துள்ளது' என, பேசியுள்ளார். அதன் பிறகே, பவித்ராவுக்கும் - கோவேந்தனுக்கும் திருமணம் நடந்துள்ளது.

மாப்பிள்ளை வேணாம்; பவித்ரா பிடிவாதம்:
பவித்ரா கொடுத்த புகார் மனு, ஆயிரம் விளக்கில் உள்ள வரதட்சணை தடுப்பு பிரிவு போலீசாருக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். "பவித்ரா தான் என் மனைவி; அவருடன் வாழ தயாராக இருக்கிறேன்' என, ஐ.எப்.எஸ்., அதிகாரி கோவேந்தன், போலீசாரிடம் தெரிவித்தார். பவித்ரா, "ஆரம்பமே பிரச்னையாகி விட்டது. இனிமேல், அவருடன் சந்தோஷமாக வாழ முடியாது. என் புகார்படி நடவடிக்கை எடுங்கள்' என, பிடிவாதமாக இருந்தார். மகளிர் போலீசார், இரு தரப்பினரிடமும் நேற்றிரவு வரை தொடர்ந்து பேசி, இளம் தம்பதியரை சேர்த்து வைக்க முயற்சித்தனர்.

Wednesday, August 1, 2012

நீதித்துறையில் இருக்கும் ஊழலைப் பற்றி தகவல் தர நீதிமன்றம் மறுப்பது ஏன் தெரியுமா?

நாட்டில் யார் குற்றம் செய்தாலும் அதை விசாரணை செய்து தண்டனை அளிக்கும் அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களில் இருப்பவர்கள் குற்றம் செய்தால் தண்டிப்பது யார்? என்று கேட்டு ஒரு குடிமகன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருக்கிறார். ஆனால் நீதிமன்றம் அதனை வெளியிட மறுக்கிறது. நீதிவழங்கும் இடத்தில் ஒளிவுமறைவு எதற்கு?

இப்படி ரகசியமாக நீதிவழங்கப்படும் இடத்தில் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கும் அப்பாவிகளுக்கு எப்படி நேர்மையாக நீதி கிடைக்கும்?

சென்னை: மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், கோர்ட் ஊழியர்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை, தகவல் கோரியவருக்கு அளிக்குமாறு, மாநில தகவல் பெறும் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனு: சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், ஐகோர்ட்டில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு சில தகவல்களை கேட்டு மனு அனுப்பினார்.

  1. எவ்வளவு நீதிபதிகள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?
  2. ஐகோர்ட் விஜிலன்ஸ் துறையில் எத்தனை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்?
  3. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடும் நீதிபதிகளையும், ஊழியர்களையும் பிடிக்க தனிக் குழு உள்ளதா?
  4. மாவட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், ஊழியர்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் எத்தனை?
  5. பணி நீக்கம், சஸ்பெண்ட், மெமோ, என எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?

என, சில கேள்விகளுக்கு தகவல்களை அளிக்க கோரியிருந்தார். ஐகோர்ட் நிர்வாக விவரங்களை கேட்டுள்ளதால், அதை வழங்க முடியவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் கோரிய தகவல்களை வழங்கும்படி, மாநில தகவல் பெறும் கமிஷன் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. மனுதாரர் கோரிய தகவல்களை வழங்காமல் இருக்க, தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநில தகவல் பெறும் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரவு : மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய இருவருக்கு எதிராக விஜிலன்ஸ் துறையில் அளிக்கப்பட்ட புகார் மீது அவர்கள் அளித்த விளக்கங்கள், விசாரணை அதிகாரியின் முடிவு பற்றிய விவரங்களை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், ஐகோர்ட் பொது தகவல் அதிகாரியிடம் கோரியிருந்தார். இந்த விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து, விவரங்களை வழங்குமாறு, மாநில தகவல் பெறும் கமிஷன், கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. பின், தனது உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை அளிக்குமாறு, கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டது.

மாநில தகவல் பெறும் கமிஷன் பிறப்பித்த இந்த இரண்டு உத்தரவுகளையும் எதிர்த்து, ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பதிவாளர் ஜெனரல் சார்பில் வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜரானார். மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட "டிவிஷன் பெஞ்ச்' மாநில தகவல் பெறும் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


======
மேற்கண்ட செய்தியில் ஒரு இந்தியக் குடிமகன் நீதிமன்ற செயல்பாடுகளைப் பற்றியும், ஊழல் ஒழிப்பு நடைமுறை பற்றியும் கேட்ட தகவலுக்கு நீதிமன்றம் மறுப்பு சொல்லியது ஏன் என்று தெரிந்துகொள்ள பின்வரும் தகவல்களை படித்துப்பாருங்கள். “மடியில் கணம் இருப்பவன்தான் பயப்படுவான்” என்ற பழமொழி எவ்வளவு உண்மை என்று தெரியும்.


டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த கடைசி 16 பேரில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள் ஆவர். 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். 2 பேர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்ட அமைச்சரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன்.

சில வருடங்களுக்கு முன்பு டெஹல்கா இதழுக்கு சாந்திபூஷனின் மகனும், சட்ட வல்லுநருமான பிரஷாந்த் பூஷன் அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவின் கடைசி 16 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் பாதிப்பேர் ஊழல் கறை படிந்தவர்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு [^] தொடரப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்கக் கோரி சாந்தி பூஷன் மனு செய்துள்ளார். அத்தோடு தனது மகன் சொன்னது அப்பட்டமான உண்மை. அதற்கான ஆதாரங்களையும் தான் தாக்கல் செய்வதாக கூறி சம்பந்தப்பட்ட நீதிபதிகள் குறித்த விவரங்களையும் ஆதாரங்களையும் மனுவுடன் சேர்த்து சமர்ப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக சாந்திபூஷன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடைசி 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள், அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அதேசமயம், 6 பேர் மிக மிக நேர்மையானவர்கள். 2 பேர் எப்பட்டிப்பட்டவர்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

டெஹல்கா இதழில் இதுதொடர்பான பிரஷாந்த் பூஷனின் பேட்டி வந்திருந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 16 பேர் விவரம்...

ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என்.வெங்கடாச்சலய்யா, ஏ.எம்.அகமதி, ஜே.எஸ்.வர்மா, எம்.என்.பன்ச்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பரூச்சா, பி.என்.கிர்பால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திரபாபு, ஆர்.சி.லஹோத்தி, வி.என்.காரே, ஒய்.கே.சபர்வால் ஆகியோர்.

சாந்தி பூஷன் தனது மேலும் கூறுகையில், இந்த மனுவை ஒரு 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரிப்பது கேலிக்கூத்தாக இருக்கும். மாறாக, ஒட்டுமொத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சேர்ந்து இந்த மனுவை விசாரிக்க வேண்டும். காரணம், இதன் மூலம் இந்திய நீதித்துறையை முற்றிலுமாக சுத்தப்படுத்த வழி பிறக்கும் என்பதால் என்று தெரிவித்துள்ளார் சாந்தி பூஷன்.

===========

தலைமையைப் பின்பற்றித்தான் துணை நீதிமன்றங்கள் இயங்குகின்றன போலிருக்கிறது!

நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனும், சிபிச் சக்ரவர்த்தியும் வாழ்ந்த நாட்டில் இப்போது நீதித்துறை எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கீழுள்ள செய்திகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு சிறு துளி மட்டுமே (Tip of the Iceberg).

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழ மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
(இது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலை - சிலையிலாவது சரியான நீதிகிடைக்கும் காட்சி இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள்!)


தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்
ஆகஸ்ட் 30,2010, தினமலர்

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் மீது கிளிக் செய்து நீதிபதிகள் கையும் களவுமாக பிடிபட்ட வீடியோவைக் காணலாம்


லஞ்ச குற்றச்சாட்டின்படிபெண் மாஜிஸ்திரேட் பணி நீக்கம்

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார்.ப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.

பணியில் இருந்து கலாராணி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய "மெமோ' அவருக்கு வழங்கப்பட்டது.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

நீதித்துறையில் மனுதாரர் அங்கம் வகிக்கிறார். நீதி அமைப்பின் முதுகெலும்பு, கீழ் கோர்ட்டுகள் தான். இந்த அடிப்படையில் ஆட்டம் கண்டால், அது நீதித்துறையின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும். நீதித்துறை சுத்தமாக, திறமையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிபதிகளுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது. நீதிபதிகளின் பொது வாழ்க்கை, அவர்களது பணியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு நீதித்துறை தான் கடைசி வழி. பணிகளை செய்வதற்காக நீதிபதிகள் லஞ்சம் வாங்க வேண்டும் என நினைத்தால், நீதித்துறை அமைப்பே சிதைந்து விடும். நீதித்துறையில் உள்ள ஊழல் சக்திகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஐகோர்ட்டுக்கு உள்ளது.

விசாரணை அதிகாரி முன் வைக்கப்பட்ட சாட்சியம், புகைப்படத்தை பரிசீலித்தால், மனுதாரருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அதிகாரியின் கண்டுபிடிப்பு, மனுதாரரை பணியில் இருந்து நீக்குவது போதுமானது. அனைத்து அம்சங்களையும் விசாரணை அதிகாரியும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் முறையாக பரிசீலித்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

மேலுள்ள செய்தி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை இங்கே காணலாம்.

In the High Court of Judicature at Madras

Dated: 30.07.2010
Coram:
The Honourable Mr.Justice ELIPE DHARMA RAO
AND
The Honourable Mr.Justice K.K.SASIDHARAN
WRIT PETITION NO.15983 OF 2007
R. Kalarani ... Petitioner
Versus
1. Madras High Court
rep.by its Registrar General
Chennai-60104.
2. The State of Tamil Nadu
rep.by the Secretary to Government
Law Department
Fort St.George
Chennai-60 009. ... Respondents


பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.

ரௌடிக்கு மாவட்ட நீதிபதி பதவி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
19 Jul 2010 தினமணி

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் பணிநியமனத்தின்போது அவர்களின் நன்னடத்தை குறித்த போலீஸ் சான்றிதழ் அவசியம் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-ல் காஷியா முகம்மது முஜாமில் என்பவரை கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த அவரை, குற்றச்சாட்டுகளின்பேரில் உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், காஷியா குறித்த ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மஜ்லிஸ்-இஸô-ஓ-தான்ஜிம் என்ற அமைப்பின் பொதுச்செயலராக செயல்பட்ட காஷியா, அப் பகுதி போலீஸ் நிலைய பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

1993-ல் பத்கல் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்துக்கு காரணமானவர் என்பது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், அவரது குற்றப் பின்னணி குறித்து விசாரிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகம் அவரை நீதிபதியாக நியமனம் செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காஷியாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் நியமனத்தின்போது, அவர்களின் நன்னடத்தை குறித்த உள்ளூர் போலீஸôரின் சான்றிதழ் அவசியம் என்றும், நீதிபதிகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கையை ஆண்டுதோறும் தயார் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=================
தலைமறைவுக் குற்றவாளி நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிசயம்!
Indian Express Fri May 21 2010

Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him.

The Madhya Pradesh High Court has suspended Additional District and Sessions Judge Narendra Kumar Jain for concealing the matter.

As a student of Christian College in Indore, Jain, along with four friends, was involved in a brawl with a hotel owner and his son in 1983. The owner, whose nasal bone was broken, lodged a police complaint that led to the arrest of Jain and his friends.

Jain was released on bail and appeared in court once in 1985. He was declared an absconder by the court when he did not appear later despite repeated summons.

Jain cleared an examination meant for judicial officers in 1994 but suppressed the fact that he was involved in a criminal case and was facing trial.

Registrar General of Madhya Pradesh High Court T K Kaushal told The Indian Express that Jain was suspended after a vigilance inquiry. He said an inquiry had been initiated against him.

Two months ago, the High Court suspended G P Agarwal, another Additional District Judge posted in Indore. His suspension followed the seizure of his laptop after a complaint. The laptop contained two orders, one of acquittal and another conviction, in one case of chain snatching.

Agarwal alleged that a secretary he had fired, in collusion with another judge, conspired against him.

பெண் ஊழியரை புரோக்கராக நீதிபதி வைத்திருந்தாரா?

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 5.1.2010

M.Mohamed Essath Ali ... Petitioner
Vs.
1.The Registrar General,High Court,Chennai-600104.

2.The Registrar,Vigilance,High Court, Chennai-600104.... Respondents

* * *

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying to issue a Writ of Certiorari to call for the entire records ending with order No.C No.39/2006/VC (in Roc.No.363/2005/VC), dated 25.6.2009, passed by the 1st respondent and quash the same.

* * *

Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.

18. However, since the time of 15 days granted in the impugned communication to the petitioner to submit his written statement of defence has already lapsed, we grant two more weeks time, from the date of receipt of a copy of this order, to the petitioner to submit his explanation to the said memo. and the disciplinary authority is directed to complete the disciplinary proceedings in accordance with law within a period of six weeks from the date of receipt of written statement of defence from the petitioner. Consequently, M.P.Nos.1 and 2 of 2009 are also dismissed. No costs.
ஆகஸ்ட் 08,2010 தினமலர்

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.


உச்ச நீதிமன்றம் நீதித்துறை பற்றி தானே விமர்சனம் செய்திருக்கிறது!
NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system.......


இவ்வளவு அதிர்ச்சியான செய்திகளுக்குப்பிறகு ஒரு காமெடி பீஸ். சிரித்துவிட்டுப் போங்கள்.



நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

==================

நீதித்துறையில் லஞ்சம் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை என்று அமைச்சர் பெருமைப் படுகிறார். கொஞ்சம் தானே ஊழல் நடக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நீதித்துறை என்ன ரேஷன் கடையா?

அவர் பெருமைப்படும் அந்த கொஞ்சம் என்பதன் அளவு என்ன என்பதை கீழுள்ள இந்த அறிக்கையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த நீதிமன்றங்களில் தான் உங்கள் மீதுபோடப்படும் பொய் வரதட்சணை கேசுகள் கையாளப்படுக்கின்றன. பொய் கேசில் சிக்கினால் உங்களது வாழ்க்கை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க இந்தத் தகவல் உதவியாக இருக்கும்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV) "

Report from 2005 Report from the Transparency International India

The former Chief Justice of Supreme Court Sam Piroj Bharucha had observed that “up to 20 per cent of judges in India were corrupt.”

Is Judiciary Corrupt?

More than three-fourths (79%) of the respondents, who had been interacting with the judiciary, admitted that corruption was prevalent in the Department. Surprisingly, only 8% of those respondents felt that there was ‘no corruption’ in Judiciary. However, not much difference is seen in perception of corruption in judiciary for states having different strength of judiciary.

Experience of Corruption in Judiciary

While 38% of the respondents had experienced corruption every time they had interacted with judiciary, 53% had experienced it some time or the other. On the other hand, only 5% never experienced corruption.

Modus operandi for Bribing

During the last one year, three-fifths (59%) of respondents had paid money to lawyer, whereas 30% had paid money to court officials, and 14% to middle men to get their work done. There were higher number of respondents claiming to have paid bribe to court officials in states having low judicial strength compared to respondents from states having high judicial strength.

Table 9.10: Money Paid

Judicial Strength Wise
(Figures in per cent)

Money Recipient

High

Medium

Low

Total

Judge

05

06

04

04

Lawyer

55

64

53

59

Court officials

17

26

44

30

Public Prosecutor

17

05

08

08

Middlemen

17

12

16

14


Lawyers, who are supposed to uphold law, have ended being conduit for corruption as if there is no monitoring or initiatives on the part of bodies like bar associations. They could put up notice boards to file complaints or give telephone number for passing on information against corrupt lawyers. There is not a single case of a lawyer being suspended for practice on account of such complaints or any effort made to get such corrupt practices enquired into independently. Although cases about delays and even prevalence of corruption in judiciary have been reported, media has never reported giving specific examples of corruption by lawyers.


நீங்கள் அப்பாவியாக இதுபோன்ற ஊழல் மலிந்த நீதித்துறையில் பொய் வழக்குகள் மூலம் சிக்கிக்கொண்டிருந்தால் இவர்களுடன் இணைந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

National Litigant Bench

470, 19 th Main, 36 th Cross, 4 th T Block, Jayanagar, Bangalore – 560041

Phone: Manoj David ( 098403-24551); Ajay Pandey ( 096204-39797 )

PRO Contact: Gokul ( 096334-09355)

Date: 11.09.2010

PRESS RELEASE

National Litigant Bench (NLB), is a novel initiative promoted by concerned and knowledgeable youth to represent the cause of hapless litigants who approach Judiciary to mitigate their problems as last resort, but are drawn into the system unwittingly. Activists from across the country deliberated on the core issues concerning about more than 5 crore litigants who loiter around the corridors of Courts wasting precious time and energy, some at the peak of their productive age.

NLB's mission is to:

· Create Awareness and Awakening of the General Litigant on the problems faced at Court room

· Transparent Judicial Appointments on merit and moral values

· Redefine the input source to Judiciary like Indian Judicial System (IJS) similar to IAS,IPS etc.

· Bring about Litigant friendly procedures and process resulting in self service

· Address Imperialist attitude of intimidation by the Bar & Bench on all Litigants especially economical weaker section.

The objective of this conference is to identify the Judicial reforms from a Litigant's perspective to create awareness about Litigant's choices and options and expose the challenges/pitfalls in the system. Deliberation of this Conference is on National Judicial Commission to include:

· Appointment of Judges through Indian Judicial Services

· Litigant grievances/ compliant on Judges ( from the current impeachment)

· Redefine the procedure code

· Reforms in the legal education

· Research on interpretation of law

· Deployment of Technology to enable ‘Information on Demand' to stakeholders.

Resolution passed and demand sought from the Government on Judicial Reforms

1. NLB to constitute five regional bench's in North, South, East, West & Central.

2. To establish National judicial Commission in line with Election Commission for regulating Judicial dispensation, appointment, Infrastructure, Procedure, disciplinary . Proceedings in the country

a. Emulate code of conduct, ethics and professional standards for legal profession

b. Redefine litigant friendly forms and procedure for Criminal ; Civil & Tax Code

c. Judges Accountability – Litigant Grievance Redressal.

3. Establish Indian Judicial Services inline with IAS,IFS, IPS etc to improve the quality of judicial dispensation.

4. Demand entry age at 26 and retirement exit at 55 years and permit the judges to practice so as to attract youth who are connected with the society.

5. Make budgetary allocation of min of 2% of both central and state budget to and enhance adq. Infra and improve work condition of Judiciary.

6. Implement Grama Nayalaya Act a brainchild of “NAC – National Advisory Council”.

7. Redefine litigant friendly forms and procedure for Crimal & Civil & Tax Coded

8. Stop Tribunalization of Judiciary which ensures govt. cases are conducted in fast track to collect taxes and common man is discriminated.

9. Stop Appointment of retired Judges to Commission and other agencies.

10. Implement technology to enable transparency and information –on-demand.

11. Amend Bar Council of India Act to improve the professional ethics and conduct & lawyer appearing at police station.

12. Amend laws to make to encourage ‘Party-in-person' to represent/plead their cases.

13. Implement Perjury & Contempt of Court to resist misuse of law by courts.

14. Implement of ‘Limitation Act' in true letter and sprits.

15. Implement ‘Basic Law' in School Education.

16. Conduct sensitization program for Judges towards litigants needs and to be receptive and sensitive to the litigants.

17. Stop Judiciary's control over Alternate Dispute Resolution Forums.

18. Stop Misuse of provisions by Judiciary in matters relating to

a. Maintainability

b. Adjournments

c. Check bounce case;

d. Dalit atrocities cases;

e. Insurance Claims Fraud (MCOP);

f. IPC 506 (ii);

g. Matrimonial disputes

h. Bail proceedings converted into Recovery proceedings.

We request the media to give adequate publicity and to create awareness to the general public on the current status of the Judiciary.

Representative from following Chapter including Delhi, Punjab & Chandigarh, Andhra Pradesh, Karnataka, Tamil Nadu, Kerala , Singapore and Europe were presented for the Conference.

Copy of this Resolution is sent to concerned law minister of state and Union Law Minister.