Tuesday, October 21, 2014

வழக்கு விசாரணையை நீட்டித்ததால் மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு

இந்திய நீதிமன்றங்கள் சாதாரண குடிமக்கள் நீதி தேடி செல்லும் இடமாக ஒரு காலத்தில் இருந்திருக்கும் போலிருக்கிறது.  ஆனால் இப்போதெல்லாம் நீதி வழங்குவதற்கு பதிலாக அநீதி இழைக்கும் இடங்களாக மாறிவிட்டன.    இந்திய நீதிமன்றங்களில் பல லட்சக்கணக்கான வழக்குகள் விசாரணை இல்லாமல் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன.
தமிழக நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் 20 லட்சம்: ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எண்ணிக்கை  தினமலா்  18/10/2014
வழக்கில் சிக்கியவா்கள் பல ஆண்டுகள் வக்கீலுக்கு பணம் கொடுத்தும்  நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்தும் நீதி கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாா்கள்.  குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்கள் பல கோடி கணக்கில் லஞ்ச ஊழல் நடக்கும் இடமாக இருக்கின்றன என்று சா்வதேச புள்ளி விபரம் கூறுவதாக தமிழக கால்துறையே குறிப்பிட்டிருக்கிறது. 
"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006!" - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
இந்தச் சூழலில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவா்களின் கதி என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டவருக்கு தக்கசமயத்தில் சரியான நீதி வழங்கப்படாமல் அவர்கள் உடலாலும், மனதாலும் வேதனை அடைந்து, துன்புறுத்தப்பட்டு பிறகு பல ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் நீதி அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகத்தான் இருக்கும் (Justice Delayed = Justice Denied). 
  
பல ஆயிரம் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் விடுவதைவிட பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட ஒரே ஒரு அப்பாவிக்குக்கூட தக்க சமயத்தில் நீதி வழங்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய அநீதி என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை. இந்த அவலத்தை முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி திரு.ஸபர்வால் அவர்கள் தனது உரையில் வேதனையுடன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
 JUSTICE SOBHAG MAL JAIN MEMORIAL LECTURE ON DELAYED JUSTICE DELIVERED BY HON’BLE SHRI Y.K. SABHARWAL, CHIEF JUSTICE OF INDIA ON TUESDAY, THE 25thJULY, 2006
I will conclude by referring to the observation made by Justice Warran Burger, former Chief Justice of the American Supreme Court observed: “…… The notion – that ordinary people want black-robed judges, well dressed lawyers, fine paneled courtrooms as the setting to resolve their disputes, is not correct. People with legal problems, like people with pain, want relief and they want it as quickly and inexpensively, as possible.”

வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படும் அப்பாவி பொதுமக்கள் யாரும் அழகான நீதிமன்ற கட்டிடங்களையும், நேர்த்தியான கருப்பு வெள்ளை சீருடையில் அமர்ந்திருக்கும் நீதிபதியையும், வழக்கறிஞர்களையும் கண்டு மகிழ்வதற்காக நீதிமன்றத்திற்கு விரும்பி வருவதில்லை.
வழக்குகளில் சிக்கியிருக்கும் வயதான பெரியோர்களும், உடல்நலக்குறைவு உடையவர்களும், பெண்களும், இளைஞர்களும் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில்கூட தங்களுக்கு (விரைவாக) நீதிகிடைக்காமல் சொல்லமுடியாத மனவேதனைகளுடன் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி விரைவாகவும், நேர்மையாகவும், லஞ்ச ஊழல் தலையீடு இல்லாமலும் கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே.
தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிதானே?

இதை படித்துவிட்டு பின்வரும் செய்தியை படித்தால்  உங்களுக்கு ஒரு தெளிவான உண்மை புரியும்.

அக்டோபர் 20,2014 தினமலா்

சாத்தூர் : சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட் மீது வீசினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, மேலத்தாயில்பட்டியைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 38. இவர், விவசாயக் கிணற்றில் மோட்டார் பம்ப் திருடிய வழக்கில் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக,நேற்று காலை, சாத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் மாரியப்பன் முன், பாக்யராஜை போலீசார் ஆஜர்படுத்தினர். எஸ்.ஐ., சதீஷ்பிரபு கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை, 15 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், பாக்யராஜை மீண்டும் சிறையில் வைக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அப்போது, பாக்யராஜ், ''என்னை உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை. எனக்காக வாதாட வழக்கறிஞரும் இல்லை. வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும்,'' என, மாஜிஸ்திரேட்டிடம் வலியுறுத்தினார். இதற்கு மாஜிஸ்திரேட், ''இலவச சட்ட உதவி முகாமை அணுகி வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்,'' என்றார்.

இதனிடையே, உள்ளாடையில், பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட்டை நோக்கி, பாக்யராஜ் வீசினார். இது, மேஜை மற்றும் மாஜிஸ்திரேட் உடையில் பட்டது. பாக்யராஜை, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று,  விசாரிக்கின்றனர்.  கைதியை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது, முழுமையாக சோதனையிட வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார், இதை பொருட்படுத்துவதில்லை. கைதிகள் வேறு பொருட்களை வைத்துள்ளனரா, என்பதை கண்டறிய வேண்டும். போலீசாரின் அஜாக்கிரதையால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

Tuesday, May 13, 2014

போதிய சட்ட அறிவு இல்லாத கீழ்நிலை நீதிபதிகளிடம் சிக்கித் தவிக்கும் நீதி

இந்தியாவில் பல கீழ்நிலை நீதிமன்றங்களில் போதிய சட்ட அறிவு இல்லாமல் இருப்பவர்கள் பணி புரிகிறார்கள்.  பல வழக்குகளில் இவர்களின் கையில் பல அப்பாவிகள் சிக்கித் தவிக்கிறார்கள்.   குறிப்பாக பொய் வரதட்சணை வழக்குகளில் கண்ணை மூடிக்கொண்டு குற்றப்பத்திரிக்கையை படிக்காமலேயே வழக்குகளை ஆரம்பித்து பல ஆண்டுகள் இழுத்தடித்து அப்பாவிகளுக்கெதிராக அநீதி இழைக்கப்படுகிறது என்பது கீழ்நிலை நீதிமன்றங்களில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு நன்றாகவே தெரியும்.

அதுபோலவே இந்திய மண்ணுக்கு வெளியே இந்திய குடிமகனால் மற்றொரு இந்திய குடிமகனுக்கு இழைக்கப்படும் குற்றங்களை இந்திய நீதிமன்றங்களில் விசாரிக்க மத்திய அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்த அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல்தான் கீழ்நிலை நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்பட்டு அப்பாவிகளின் காலம், மனம், பணம் போன்றவை வீணடிக்கப்படுகின்றன.  இதுமட்டுமல்லாமல் இதுபோன்ற தவறான வழக்குகளை நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் நடத்திக்கொண்டிருப்பதால் இந்திய மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது.


அடிப்படை சட்ட அறிவு இல்லாத நீதிமன்றங்களில் சிக்கும் அப்பாவிகளை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.

வெளிநாட்டில் குற்றச் சம்பவம்; இந்தியாவில் விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு


மே 13,2014 தினமலர்

மதுரை: 'திருச்சியை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில், தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி, ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக, வந்த புகாரின் அடிப்படையில், கீழ் கோர்ட் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாட்டில் நடந்த குற்றச் சம்பவத்திற்கு, இந்தியாவில் விசாரித்து, தண்டனை வழங்க முடியாது. விசாரிக்க, மத்திய அரசின் அனுமதி தேவை,' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி புதூர் கார்த்திக் தியோடர். இவர், ஆஸ்திரேலியா சிட்னியில் பணிபுரிந்தார். அங்கு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர், ஓட்டல் வைத்துள்ளார். அவரது 29 வயது மகளுக்கும், கார்த்திக் தியோடருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண், 'எனக்கும், கார்த்திக் தியோடருக்கும், 2007 ல் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றிக்கொண்டோம். கணவன், மனைவியாக வாழ்ந்தோம். திருமணம் செய்வதாகக்கூறி, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். கார்த்திக் தியோடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார் செய்தார். இவ்வழக்கில் கார்த்திக் தியோடருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருச்சி செஷன்ஸ் (மகிளா) கோர்ட், 2011 செப்.,29 ல் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட் கிளையில் கார்த்திக் தியோடர் மனு செய்தார்.

நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு:

பெண் குற்றச்சாட்டின்படி, சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. அச்சம்பவத்திற்கு இங்கு வழக்குப் பதிவு செய்து, தண்டனை வழங்க முடியாது. இங்கு விசாரிக்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். அந்நடைமுறை, இவ்வழக்கில், கீழ் கோர்ட்டில் பின்பற்றப்படவில்லை. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பற்றி, அவரது தரப்பு சாட்சிகளிடமும் விசாரிக்க வேண்டும். புகார்தாரரான தமிழ் பெண் பட்டம் பெற்று, சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ., படித்தபின், அங்கு ஒரு வங்கியில் பணிபுரிந்துள்ளார். அவர் தமிழ் பெண்ணாக இருந்துகொண்டு, அவரது பெற்றோருக்குத் தெரியாமல், திருமணத்திற்கு முன்பே, மனுதாரருடன் சேர்ந்து வாழவேண்டிய அவசியம் என்ன? அப்பெண், மனுதாரருக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் புகார் கொடுத்திருக்கலாம். திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது. இதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது. வெளிநாட்டு வேலைக்குச் சென்றாலும், இந்திய கலாசாரத்தை மறக்காமல் பின்பற்ற வேண்டும். கீழ் கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, என்றார்.